தவத்தின் போது மன அலைச்சல் குறைவதால் மனம் அமைதி பெறுகிறது.
தவப்பயிற்சி மாணவ, மாணவியர்களின் செயல் திறனைப் பெருக்கி நல்ல மதிப்பெண்களைப் பெறவும், வாழ்க்கைக்கு வேண்டிய ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளவும் பெரிதும் உதவுகிறது.
தவப்பயிற்சியினால் மாணவர்களின் படைப்புதிறன், மன உறுதி, மதிநுட்பம், மற்றவர்களை மதிக்கின்ற பெருந்தகைமை, பொறுமை, ஏற்புத்திறன், மற்றவர்களோடு இணைந்து வாழும் தன்மை ஆகிய உயர் பண்புகள் பெறுகின்றன.