ஆகின தவம் (Agna Thavam)
ஆக்கினை தவம்:
மூலாதாரத்தில் இருந்து உயிரை எழுப்பிப் புருவ மையத்திற்குக் கொண்டு வந்து உயிரை உணர்வது. ஆக்கினையில் தவம் ஏற்றுவதால் பிட்யூட்டரி சுரப்பி நன்கு வேலை செய்கிறது.
ஆக்கினை தவத்தின் பயன்கள்
- பொருள் கவர்ச்சி நீங்கும்.
- தன்னிலை விளக்கம் கிடைக்க வழி திறக்கும்.
- விரும்பிய நல்வழியில் நிற்கும் திறன் கிடைக்கும்.
- ஆசை அளவோடு நிற்கும்; பேராசையாக விரியாமல் தடுக்கப்படும்.
- விளைவறிந்து செயல்படும்; அயராவிழிப்பு நிலை கிடைக்கும்.
- புறமனதிற்கு நுட்பமும் வேகமும் பெருகும்.
- புலன்களை அறிவின் கட்டுக்குள் வைத்திருக்க இயலும்.
- முரட்டு வைராக்கியம், வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட கடுஞ்சினம் ஆகியவை இன்றி, இயல்பாகவே புலன்கள் அடங்கி போகும்.
ஆக்கினை தவத்தைப் பருவ வயது வந்த ஆண், பெண் இருபாலரும் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்.