சாந்தி தவம் (Shanthi Thavam)
சாந்தி தவம்:
மேலே புருவ மையத்திற்குச் சென்ற உயிர் மையத்தைத் திரும்பவும் மூலாதாரத்திற்குக் கொண்டு வருவது.
சாந்தி தவத்தின் பயன்கள்
- பஞ்சபூதத் தத்துவத்தில் மண் ஆகிய பிரிதிவிக்கு உரிய இடம் மூலாதாரம். இங்கு நின்று தவம் மாற்றுவதால் நிலத்தைச் சார்ந்த ஆராய்ச்சி பற்றிய அறிவு அதிகமாகிறது.
- அதிகப்படியான தவ ஆற்றல் சாந்தி தவத்தின் பயனாக உடலாற்றலாக மாறுகிறது. அது உடல் நலனுக்கும், நோய் எதிர்ப்புக்கும் பயன்படுகிறது.
- உடல் வலி, தலைவலி, காய்ச்சல், அசீரணம் போன்ற சாதாரண நோய்கள் சாந்தி தவத்தால் நீங்குகின்றன. மலச்சிக்கல் விலகுகிறது. உடல்சூடு குறைகிறது. இரத்த அழுத்தம் சமப்படுகிறது. இயற்கையான உறக்கம் கிட்டுகிறது.
- உடலில் உயிரின் இயக்கம் சீராகிறது.
- சாந்தி தவத்தில் உடல் வெப்பம் தணிகிறது. நரம்பு மண்டலம் அமைதி யடைகிறது.
- உடல் சோர்வு, மனசோர்வு நீங்கி உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறுகின்றன.