துரிய தவம் (Thuriya Thavam)
துரியதவம்:
உயிர் மையத்தைத் தலை உச்சிக்குக் கொண்டு வருவது. பீனியல் சுரப்பி நன்கு இயக்கம் பெறுகிறது.
துரிய தவத்தின் பயன்கள்
- ஆன்மா தனது பலிச்செயல் பதிவுகளில் இருந்து தூய்மை பெற ஏற்றதோர் பயிற்சி துரிய நிலை தவமாகும்.
- துரிய நிலை தவம் நடு மனதில் நின்று ஆற்றப்படுவதால், அறிவு நடுமனதை வெற்றி கொள்கிறது. எனவே, மனதின் விரியும் தன்மை இந்தத் தவத்தால் கூடுகிறது.
- நாம் என்னும் உயரிய எண்ணம் பலபேர் உள்ளத்தில் பிரதிபலிக்கும்.
- நாம் கொடுக்கும் சங்கர்ப்பங்களும், வாழ்த்துக்களும் நன்கு செயல்படும்.
- மனதிற்கு வேகமும், நுட்பமும், எளிதில் உணர்ச்சி வயப்படாத நிலையும் கிடைக்கும்.
- எண்ணத்தை ஆராயவும், அகத்தாய்வு ( Introspection) செய்யவும், கவலைகளை ஆராய்ந்து ஒழிக்கவும் துரிய நிலை தவம் பெரிதும் துணையாக இருக்கும்.
- பிராரப்த கர்மாவில் ( தன்வினை) இருந்து விடுவிக்கிறது.
- உள்ளக் களங்கமும் உடல் களங்கமும் துடைக்கப்பட்டு தூய்மை உண்டாகிறது.